ஒரு பெரியவருக்கு ஐந்து பிள்ளைகள்.பஞ்ச பாண்டவர்கள்போல அவர்கள் வாழ வேண்டும் என நினைத்து அவர்கள் பெயரையே வைத்தார்.ஆண்டுகள் பல கழித்து பையன்களைப் பற்றி நண்பர் ஒருவர் கேட்டபோது பெரியவர் சொன்னார்,''பேருக்குத் தகுந்த மாதிரியாவே இருக்காங்க,''என்றார் பெரியவர். நண்பர்,''அப்படியா,மிக்க மகிழ்ச்சி,''என்றார்.பெரியவர்,''மகிழ்ச்சி அடைய என்ன இருக்கு.பஞ்ச பாண்டவர்களைப்போலவே இவர்களும் சொத்து முழுவதையும் சூதாட்டத்திலே விட்டுட்டாங்க.இவர்களைக் காப்பாற்ற கண்ணன்தான் வரவேண்டும்.''என்றார்.
|
|
சூப்பர்...
இப்படித்தான் இருக்கனும்...