இரண்டு விதமான உயர்வு மனப்பான்மைகள் உள்ளன.ஒன்றில் நீங்கள் உங்கள் தாழ்வு மனப்பான்மையை மூடி மறைக்கிறீர்கள்.நீங்கள் ஒரு முகமூடியைப் பயன்படுத்துகிறீர்கள்.முகமூடிக்குப் பின்னே தாழ்வு மனப்பான்மை உள்ளது.இந்த உயர்வு மனப்பான்மை மேலோட்டமானது. ஆழத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதால் இது உண்மையான உயர்வு மனோபாவம் கிடையாது.தாழ்வு மனோபாவம் இல்லாமையே இன்னொரு உயர்வு மனப்பான்மை ஆகும்.நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்காத வரை எப்படித் தாழ்வானவராக இருக்க முடியும்?இவ்வுலகில் நீங்கள் மட்டும் இருந்தால் உங்களை நீங்கள் யாருடன் ஒப்பிட முடியும்?எப்படி நீங்கள் தாழ்ந்தவராக இருக்க முடியும்?தனியே இருக்கும்போது நீங்கள் உயர்ந்தவரும் அல்ல'தாழ்ந்தவரும் அல்ல.இதுதான் ஆன்மாவின் உயர்ந்த தன்மை.அது யாருடனும் ஒப்பிடுவதில்லை.நீங்கள் உங்களை யாருடனும் எதற்கும் ஒப்பிட வேண்டாம்.நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்.நீங்கள் சிறப்பானவர்.
|
|
Post a Comment