உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தர்மம்

0

Posted on : Tuesday, August 23, 2011 | By : ஜெயராஜன் | In :

பதிமூன்று ஆண்டு காலம் வனவாசம் என்று காட்டில் பொறுமையாக இருந்த தர்மரைப் பார்த்து பாஞ்சாலி துளைத்தெடுத்தாள்,''பதிமூன்று ஆண்டுகள் காத்திராமல் இடையில் நீர் போய் ஏன் துரியோதனனைக் கொல்லக் கூடாது? சத்தியம்,பொறுமை என்று தர்மத்தைக் கட்டி அழுகிறீரே,நீர் காப்பாற்றும் தர்மம் உம்மைக் காப்பாற்றவில்லையே?காட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டதே?''தர்மர் அமைதியாகச் சொன்னார்,''பெண்ணே,தர்மம் என்னைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் நான் தர்மத்தைக் காப்பாற்றவில்லை.  அப்படிச் செய்தால் அது வியாபாரம்.நான் தர்ம வியாபாரி அல்ல.தர்மத்தைக் காப்பது என் பிறவிக்கடன்.தர்மங்கள் என்னைக் காத்தாலும்,காக்காது போனாலும் அவற்றைக் காப்பது என் கடமை.அதிலிருந்து நான் நழுவவே முடியாது.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment