உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கெளரவமானவர்

0

Posted on : Tuesday, August 02, 2011 | By : ஜெயராஜன் | In :

பொது இடத்தில் தன்னை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதற்காக ஒருவன் மீது ஒரு பெண் வழக்கு தொடர்ந்தாள்.என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தினான் என்று கூறுமாறு வக்கீல் கேட்டார்.அந்தப்பெண் சொன்னாள்,''ரொம்ப அசிங்கமான வார்த்தைகள் அவை.கண்ணியமான எவரும்  அதைக் கேட்க விரும்ப மாட்டார்கள்,''வக்கீல் சொன்னார்,''அப்படியானால் நீதிபதி அருகில் சென்று அவருக்கு மட்டும் கேட்கும்படியாக சொல்லுங்கள்.''
**********
பேருந்தில் ஏறிய  நடுத்தர வயதைக் கடந்த ஒரு பெண் டிக்கெட் வாங்காமல் இருந்ததைக் கண்ட நடத்துனர் கோபத்துடன்,''யே கிழவி,ஏன் டிக்கெட் எடுக்கவில்லை?''என்று கேட்டார்.அந்தப்பெண்  கோபத்துடன்,''முதலில் மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்.கிழவி என்று ஏன் சொன்னாய்? வேண்டுமானால் அக்கா என்று சொல்,''என்று சொல்லியவாறு டிக்கெட்டுக்குரிய பணத்தைக் கொடுத்தாள்.பேருந்தில் இருந்த பயணிகள் அப்பெண்ணின் பேச்சைக் கேட்டு ரசித்தார்கள்..அடுத்த நிறுத்தத்தில் வாட்டசாட்டமான ஒரு சாது ஏறினார்.அவர் உட்கார இடம் கிடைக்குமா என்று தேடினார்.நடத்துனர் சொன்னார்,''மைத்துனரே,அதோ அக்கா பக்கத்தில் இருக்கை காலியாயிருக்கிறதே,அங்கு போய் உட்காருங்கள்''இப்போது பயணிகள் கொல்லென்று சிரித்தனர்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment