உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உருப்படாதவன்

0

Posted on : Tuesday, August 02, 2011 | By : ஜெயராஜன் | In :

நண்பர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்டனர்.ஒருவர் தான் நன்றாய் இருப்பதாகக் கூறிவிட்டு அடுத்தவரிடம் அவரைப்பற்றிக் கேட்க அவர் சொன்னார்,''எனக்கு நான்கு பையன்கள்.ஒருவன் டாக்டர்,அடுத்தவன் எஞ்சினியர்,இன்னொருவன் வக்கீல்.நான்காவது பையன்தான் உருப்படாமல் போய்விட்டான்.எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை.அவன் இப்போது பார்பராக இருக்கிறான்.''நண்பர் கேட்டார்,''அப்படிப்பட்ட பையனை வீட்டை விட்டுத் துரத்த வேண்டியதுதானே.''அவர் பதில் சொன்னார்,''அவனைத் துரத்திவிட்டு நாங்கள் என்ன செய்வது?அவன் ஒருவன் தானே எங்கள் வீட்டில் சம்பாதிப்பது.''
**********
பேருந்தில் ஒரே கூட்டம்.நிற்கக்கூட இடமில்லை.ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் கண்ணை இறுக மூடிக் கொண்டிருந்தான்.அருகில் இருந்த நண்பன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''எனக்கு இளகிய மனது.வயதானவர்கள் எல்லாம் நின்று கொண்டிருப்பதை கண் கொண்டு பார்க்க எனக்கு சகிக்கவில்லை.''
**********
''பாவம் ரவி,அவன் மிகுந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன்.''
'ஏன்,அவனைத்தான் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருக்கிறார்களே!'
''அதனால்தான் அவர்கள் ஏழைகளாய் ஆகிவிட்டனர்.''
**********
''என்ன உன் மனைவியைக் கடத்தி விட்டார்களா?கொஞ்சம் கூடப் பதட்டம் இல்லாமல் சாதாரணமாக சொல்கிறீர்களே?''
'அவள் அறுவையை யாராலும் ஒரு நாளைக்கு மேல் தாங்க முடியாது.''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment