மூன்று நண்பர்கள் ஒரு உணவகத்துக்கு சென்று மூன்று காபி கேட்டதும் மூன்று பேர் முன்னரும் காபி வைக்கப்பட்டது.அப்போது கூட்டமாக அங்கு திரிந்து கொண்டிருந்த ஈக்களில் மூன்று மூன்று பேரின் காபியிலும் விழுந்தது.ஒருவன் வெறுத்துப்போய் தன கிளாசைத் தள்ளி வைத்தான்.அடுத்தவன் ஈயை வெளியே எடுத்தான் தூக்கி எறிந்தான் காபியைக் குடித்தான்.மூன்றாமவன் ஈயை வெளியே எடுத்தான்.அந்த ஈயை கிளாசுக்குல்லேயே உதறினான்.அவன் ஈயைப் பார்த்து சொன்னான்,''நீ குடித்ததைத் துப்பிவிடு என் காபியில் உனக்குப் பங்கு தர முடியாது.''
|
|
Post a Comment