உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஆபத்து இல்லா இடம்

0

Posted on : Sunday, August 21, 2011 | By : ஜெயராஜன் | In :

டெல்லியில் விலங்கு பூங்காவிலிருந்து இரண்டு புலிகள் வெளியே ஓடி விட்டன.ஆறு மாதங்களுக்குப்பின் அவை இரண்டும் பூங்காவிற்கே திரும்ப வந்தன.அப்போது ஒரு புலி இளைத்திருந்தது.ஒரு புலி நன்கு கொழுத்திருந்தது.இளைத்த புலி சொன்னது,''நான் தெரியாமல் ராஜஸ்தான் பக்கம் போய்விட்டேன்.அங்கு சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. தப்பித்தவறி ஏதாவது விலங்குகள் கிடைத்தாலும் அவையும் பஞ்சத்தில் சதை இல்லாமல் இருந்தன.இந்தப் பூங்காவிலாவது வேளா வேளைக்கு உணவு கிடைக்கும்.அதனால் திரும்பி வந்துவிட்டேன்.''கொளுத்த புலி தன கதையை சொன்னது,''முதலில் எனக்கு அதிர்ஷ்டம் தான்.நான் டெல்லி செக்ரடேரியட்டிற்குள் நுழைந்து விட்டேன்.ஒவ்வொரு நாள் மாலையும் வேலை முடிந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியே வரும்போது ஒரு ஆளைப் பிடித்துக் கொண்டு போய்விடுவேன்.ஆறு மாதமும் இவ்வாறு செய்து வந்தேன்.யாரும் என்னைக் கவனிக்க வில்லை.நேற்று ஒரு தவறு செய்து விட்டேன்.எல்லோருக்கும் தேநீர்,காபி கொண்டு வந்து கொடுக்கும் ஆளை அடித்துத் தின்று விட்டேன்.அப்போதுதான் எல்லோருக்கும் தெரிய வந்து என்னை விரட்டத் தொடங்கி விட்டார்கள்.ரத்த வெறி பிடித்த அவர்களிடம் அகப்படுவதை விட இந்த பூங்கா ஆபத்தில்லாத இடம் என்று ஓடி வந்து விட்டேன்.''
                                                                   குஷ்வந்த்சிங் ஜோக்ஸ்

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment