உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எளிமையே வலிமை

0

Posted on : Friday, August 19, 2011 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் சில எளிய விஷயங்கள் தான் நம் வலிமைக்குக் காரணமாக இருக்கின்றன.அவற்றை அலட்சியப்படுத்துவதாலேயே நமக்குப் பல நோய்கள் வருகின்றன.
நாம் உணவு உண்டபின் செய்யக்கூடாத சில எளிய விஷயங்கள்;
*உணவு உண்ட உடன் சிகரெட் குடிக்கக்கூடாது.உணவு சாப்பிட்டவுடன் குடிக்கும் ஒரு சிகரெட் பத்து சிகரெட் குடிப்பதற்கு சமம்.இதனால் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் ஆகும்.
*உணவு உண்டவுடன் பழங்கள் சாப்பிடக்கூடாது.சாப்பிட்டால் வயிறு ஊதும்.எனவே ஓரிரு  மணி நேரம் உணவுக்கு முன்னரோ பின்னரோ சாப்பிடலாம்.
*உடனே தேநீர் அருந்தக்கூடாது.அதில் அமிலம் அதிகம் இருப்பதால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன்  சத்துக்கள் இறுகி ஜீரணம் கடினமாகும்.
*சாப்பிடும்போது பெல்ட் அணிந்திருந்தால் முடித்தவுடன் அதைக் கழட்டக் கூடாது .குடல் பிரச்சினைகள் வரும்.
*சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது.குளிக்கும்போது உடல் முழுவதும் அதிக இரத்தம் பாயும்.எனவே வயிற்றுக்கு வரும் இரத்தத்தின் அளவு குறையும்.எனவே ஜீரணம் பாதிக்கப்படும்.
*சாப்பிட்டவுடன் நடக்கக் கூடாது சிலர் சாப்பிட்டவுடன் சிறிது தூரம் நடப்பதைப் பழக்கமாக வைத்துள்ளனர்.அது உணவிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதைப் பாதிக்கிறது.
*உணவை உண்டவுடன் தூங்கக்கூடாது.ஜீரணம் ஆவது கடினமாகும் வாயுத் தொல்லைகள் உருவாகும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment