உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தக்கத்திம்

0

Posted on : Friday, July 13, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாட்டுப் புறப் பாடல்.எவ்வளவு அழகாக புனையப் பட்டிருக்கிறது என்று பாருங்கள்.முதலில் அந்தப் பாடலின் சூழல்:
வீட்டுப் பூனை பக்கத்துக் காட்டிலிருந்த ஒரு நரியிடம் நட்புக் கொண்டது.வீட்டில் பூனைக்குக் கிடைக்கும் வசதிகளை கேட்டு அறிந்த பூனைக்கு எப்படியும் அந்த வீட்டுக்கு வர ஆசை.பூனை நரியை வீட்டில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியும் நரியின் தொடர்ந்த வற்புறுத்தலால் வீட்டுக்கு யாரும் இல்லாத நேரம் பார்த்துக் கூட்டி வந்தது.கீழே அதை ஒளித்து வைக்க இடம் இல்லாததால் மொட்டை மாடியில் ஒரு ஓரத்தில் அமர வைத்தது.பின் பூனை மகிழ்ச்சியில் 'மியாவ்,மியாவ்,'என்று கத்தியது.உடனே தன் மகிழ்ச்சியைக் காட்டிட நரியும் ஊளை இட்டது.உடனே அங்கு எல்லோரும் ஓடி வந்து நரியை விரட்டி அடித்தனர்.காட்டிற்கு காயங்களுடன் வந்த நரியை,மற்ற நரிகள் நடந்ததை விசாரித்து அறிந்து இந்தப் பாடலைப் பாடின:
''கூடாதவங்களிடம்  கூடவா சொன்னோம்?''
     'கூடினால் என்ன?'
''கூடங்கள் மாடங்கள் ஏறவா சொன்னோம்?''
     'ஏறினால் என்ன?'
''நாதங்கள் கீதங்கள் பாடவா சொன்னோம்?''
     'பாடினால் என்ன?'
''பாடினதாலே தாளங்கள் மேளங்கள் 
தக்கத்திம்மென விழுந்தனவே!'' 
நீதி:எதைச் செய்தாலும் யோசித்துச் செய்ய வேண்டும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment