உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அன்பின் வலிமை.

1

Posted on : Friday, July 20, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு குழந்தை ஒரு நாளைக்கு நானூறு முறை சிரிக்கிறது.பத்து வயதுக்கு மேல் ஒருவன் பதினேழு முறைதான் சிரிக்கிறான்.வயது வந்தவர்கள் சிரிப்பது மிகக் குறைவு.ஏன்,நீங்கள் சிரித்தால்உங்கள் சொத்து எதுவும் கொள்ளை போய்விடுமா?சிரிப்பதால் எதை இழக்கிறீர்கள்?நீங்கள் சிரிக்கும்போது அடுத்தவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.நாம் இன்னும் அதிகம் சிரிக்க வேண்டும்.தினசரி காலை எழுந்தவுடன் கண்ணாடியில் உங்கள் உருவத்தைப் பார்த்து ஒரு பெரிய புன்சிரிப்பினைக் காட்டுங்களேன்.
உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களே தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்.சில ஆயிரம் பேர்தான் குற்றங்களை இழைக்கிறார்கள். ஆனால் இவர்களால் முழு உலகமும் பாதிக்கப்படுகிறது. இந்த விதி இதற்கு எதிர்மறையானதுக்கு ஒத்து வராதா?குறைந்த அளவு மோசமானவர்களால் உலகம் பாதிப்படையுமானால் குறைந்த சிலரின் அன்பு இவ்வுலகை மகிழ்ச்சிக்கு மாற்றிச் செல்லாதா?நம்மில் சிலர்,சில ஆயிரம் பேர் ஏன் மிக்க அன்புடன் இந்த உலகின் மீது அக்கறை கொண்டு முழுமையான மகிழ்ச்சியை கொண்டு வரக் கூடாது?
                                                                ---ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

gud post

Post a Comment