உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தாவோ என்றால் என்ன?

0

Posted on : Saturday, July 28, 2012 | By : ஜெயராஜன் | In :

ஞானி யாகூ சான் ,தன சீடர்களுக்கு உற்சாகமாக போதனைகள் செய்து கொண்டிருக்கும்போது அவரைப் பார்க்க அந்தப் பகுதியின் கவர்னர் வந்தார்.யாகூசானின் உதவியாளர் அவருக்கு அறையைக் காண்பித்தார்.அப்போது யாகூசான் ஒரு சூத்திரத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார்.யாகூசான் கவர்னர் வந்ததைப் பார்க்கவில்லை.அவர் கவனம் முழுவதும் படிப்பில் இருந்தது.கவர்னர்  இயல்பிலேயே கோபக்காரர்.அவர் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு திரும்பத் தயாரானார்.அப்போது அவர் அதிருப்தியைத் தெரிவிக்க எண்ணி,''உங்கள் முகத்தைப் பார்ப்பதைவிட  உங்கள் பெயரே சிறந்தது என்று நினைக்கிறேன்.'' என்றார்.அப்போதுதான் அவரைக் கவனித்த யாகூசான்,''உங்களுடைய கண்களைத் தாழ்த்தி காதுகளுக்கு ஏன் நீங்கள் மதிப்புக் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.கவர்னர் தன் இரு கைகளையும் ஒன்று சேர்த்து,வணக்கமாகக் குனிந்து,''தாவோ என்றால் என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.யாகூசான் உடனே தன் கைகளை மேலும் கீழும் அசைத்துக் காட்டி,''புரிந்து கொண்டீர்களா?''என்றார்.கவர்னருக்குப் புரியவில்லை. யாகூசான் பிறகு சப்தமாக,''மேகங்கள் ஆகாயத்தில் இருக்கின்றன.நீர் கிணற்றில் இருக்கிறது.''என்றார்.கவர்னருக்கு இப்போது புரிந்துவிட்டது.அவர் மிகவும் மகிழ்வுடன்,மன நிறைவு பெற்று யாகூசானை குனிந்து வணங்கி கீழ்க்கண்ட பாடலை யாகூசானுக்கு அன்பளிப்பாக அளித்தார்.
''முயன்று பெற்ற அனைத்தின் தோற்றமும் நாரையினது போன்றதே.
ஆயிரம் பைன் மரங்களுக்கிடையே இரண்டு கம்பங்கள் வழியாகக் கேட்க வந்தேன்.
தாவோ பற்றி உதவாக்கரை வாதம் இல்லை.
மேகங்கள் ஆகாயத்தில்,தண்ணீர் கிணற்றில்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment