உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புள்ளிவிபரம்.

0

Posted on : Saturday, July 14, 2012 | By : ஜெயராஜன் | In :

சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபோது ஒரு சமயம் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுக்களை அடுக்கின.மேலும் அவற்றிற்கு மறுநாளே பதில் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.அலுவலகம் வந்த சர்ச்சில் அனைத்து துறை உயர் அதிகாரிகளையும் வரவழைத்து எதிர்க் கட்சியினரின் கேள்விகளுக்கு தக்கபடி பதிலுரைக்க தேவையான அனைத்துப் புள்ளி விபரங்களையும் தருமாறு கேட்டார்.அதிகாரிகள் முகத்தில் ஈயாடவில்லை.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தயங்கியபடி இருந்தனர்.சர்ச்சில் காரணம் கேட்க தலைமைச் செயலர் சொன்னார்,''ஐயா,எப்படிப் பார்த்தாலும் இந்தப் புள்ளி விபரங்கள் சேகரிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்,''சர்ச்சில் முகத்தில் ஒரு மலர்ச்சி.தலைமைச் செயலர் சொன்னதை மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்திக் கொண்டார்.பின்னர் அதிகாரிகளிடம் ஒன்றும் சொல்லாமல்,''நீங்கள் போகலாம்,''என்று சொன்னார்.அதிகாரிகள் கலக்கத்துடன் ஒன்றும் புரியாமல் அங்கிருந்து நகன்றனர்.மறு நாள் பாராளுமன்றத்தில் சர்ச்சில் ஏகப்பட்ட புள்ளி விபரங்களைக் கூறி எதிர்க் கட்சியினரின் வாயை அடைத்து விட்டார்.தலைமை செயலர் பின்னர் அவரிடம் அதிசயத்துடனும், ஆர்வத்துடனும் கேட்டார்,''நேற்று நாங்கள் யாரும் எந்தப் புள்ளி விபரமும் தரவில்லையே!உங்களால் எப்படி இவ்வளவு புள்ளி விபரங்களை எடுக்க முடிந்தது?''சர்ச்சில் சிரித்துக் கொண்டே சொன்னார்,''நீங்கள் தான் அவற்றை எடுக்க இரண்டு வருடம் ஆகும் என்றீர்களே!அதனால் நான் என் விருப்பத்திற்கேற்றார்போல புள்ளி விபரங்களை எடுத்து அடுக்கினேன்.அவை சரியா என்று தெரிந்து கொள்ளவே எதிர்க் கட்சியினருக்கு பல ஆண்டு ஆகுமே!உங்களுக்கே தெரியாதது அவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியும்?''.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment