உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விடுகதைகள்-3

0

Posted on : Tuesday, July 10, 2012 | By : ஜெயராஜன் | In :

1.செத்தவன் சந்தைக்குப் போகிறான்.-அது என்ன?
******
2.ஒருவனுக்குள் ஒளிந்திருப்பவர் நால்வர்.-அது என்ன?
******
3.குண்டுப் பாப்பா குழியில விழுந்திட்டா.
குச்சிப் பாப்பா அவளை எடுத்துப் போடுறா.-அது என்ன?
******
4.ஒரு பொட்டியில ரெண்டு தைலம் .-அது என்ன?
******
5.வண்ணான் வெளுக்காத வெள்ளை இல்லை;
கொசவன் செய்யாத சட்டி இல்லை;
கிணத்தில் இல்லாத தண்ணியில்லை.=அது என்ன?
******
6.கீழயும் மேலயும் கல்லுக்  கோட்டை.
நடுவில் இருப்பவன் செல்லப் பிள்ளை.-அது என்ன?
******
7.கத்தாழ வேலிக்குள்ளிருக்கு கருஞ்சுருட்ட பாம்பு.
வந்தவை போனவைகளுக்கெல்லாம் வழி சொல்லுது.-அது என்ன?
 ******
8.அண்ணன்தம்பி  அஞ்சு பேரு.
அஞ்சு பேருக்கும் ஒரே வீடு.-அது என்ன?
******
9.காத வழி போனாலும் 
கை கடுக்காச்சுமை.அது என்ன?
******
10.தத்தக்கா பித்தக்கா நாலு காலு;
தானே நடக்கையிலே ரெண்டு காலு;
உச்சி வெளுக்கையில மூணு காலு.
ஊர விட்டுப் போகையில பத்துக் காலு.  அது என்ன?
******
விடைகள்;
1.கருவாடு. 2. பால்,தயிர்,மோர்,வெண்ணை.  3.பணியாரம்.  4.முட்டை.   5.தேங்காய்.   6. நாக்கு.   7.நாக்கு.  8. ஐந்து விரல்கள்,உள்ளங்கை.  9.குழந்தை.   10.குழந்தைப் பருவத்தில் கை இரண்டு,கால் இரண்டும் காலாய் உபயோகப்படுவதால் நான்கு கால்கள்;தானே நடக்கும்போது இரண்டு கால்கள் மட்டும் உபயோகப் படுகின்றன.தலை நரைத்தவுடன் ஊன்று கோல் உதவியுடன் நடப்பதால் மூன்று கால்கள்.இறந்தவுடன் தூக்கிச் செல்பவர் நான்கு பேரின் கால்கள் எட்டு.இறந்தவரின் கால்கள் இரண்டு.ஆக மொத்தம் பத்து.
 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment