உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உயில்

0

Posted on : Saturday, July 21, 2012 | By : ஜெயராஜன் | In :

நூறு வயதான பெண்மணி ஒருவர் இறந்துவிட்டார்.உறவினர்கள் கூடி விட்டனர்.அவர் எழுதி வைத்திருந்த உயில் எடுத்து வாசிக்கப்பட்டது.அந்தப் பெண்ணின் படுக்கை அறையில் இருந்த பெரிய மரப்பெட்டி அதுவரை அவரைக் கவனித்து வந்த டாக்டருக்கு உரித்தாகும் என்று அந்த அம்மையார் உயிலில் குறிப்பிட்டிருந்தார்.டாக்டருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டரும் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்.எல்லோர் முன்னிலையிலும் பெட்டி திறக்கப்பட்டது.பெட்டிக்குள்  .......
இத்தனை  ஆண்டுகளாக  டாக்டர்  அந்தப் பெண்ணுக்கு  எழுதிக்  கொடுத்த  அத்தனை  மருந்துச்  சீட்டுகளும்  வாங்கப்பட்ட மருந்து மாத்திரைகளும் முழுமையாக பத்திரமாக இருந்தன.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment