உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விடுகதைகள்

0

Posted on : Thursday, July 05, 2012 | By : ஜெயராஜன் | In :

1.கடித்தால் கடிபடாது.
பிடித்தால் பிடிபடாது.அது என்ன?
******
2.முள்ளு முள்ளாய் இருக்கும்,பலாக்காயுமல்ல ;
உள்ளே பழுத்திருக்கும்,பாகற்காயுமல்ல;
உருக்கினால் நெய் வடியும்,வெண்ணெயும்  அல்ல.அது என்ன?
******
3.இரவெல்லாம் பூங்காடு;
பகலெல்லாம் வெறுங்காடு.அது என்ன?
******
4.அட்டைக்கு ஆயிரம் கண்கள்;
முட்டைக்கு மூன்று கண்கள்;
அயோத்தி ராமனுக்கு ஒரே கண்.அது என்ன?
******
5.மஞ்சக் குருவி ஊஞ்சலாடுது.அது என்ன?
******
6.ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்.அது என்ன?
******
7.உடம்பில்லாதவன் ஊரெல்லாம் போவான்.அது என்ன?
******
8.தங்க மாம்பழம்.
திங்க முடியல்லே.அது என்ன?
******
9.பிச்சிப்பூ சிதறிக் கிடக்கு.பொறுக்க நாதியில்லே;  
ராசா மகா கோபிச்சுக்கிட்டுப் போறா,அழைக்க நாதியில்லே;
சமுக்காளம் கிழிஞ்சு கிடக்கு,தைக்க நாதியில்லே.அது என்ன?
******
10.கணக்கிலாப் பிள்ளைகளை கழுத்தைச் சுற்றி 
சுமக்கும் தாய்,அது எந்தத் தாய்?
******
விடைகள்:
1.தண்ணீர்.  2.ஆமணக்கு.  3.வானம்.   4.சல்லடை,முட்டை,ஊசி.   5.எலுமிச்சம்பழம்   6.மூக்கு.   7.காற்று,புகை.  8.நெருப்பு.  9.நட்சத்திரங்கள்,நிலா,வானம்.   10.தென்னை   
 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment