உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எது அழகு?

0

Posted on : Wednesday, July 04, 2012 | By : ஜெயராஜன் | In :

அக்பர் ஒரு முறை,அவருடைய நாட்டிலேயே அழகு மிகுந்த ஒரு மனிதனைப் பார்க்க விரும்பினார்.அப்படிப்பட்ட மனிதனைக் கண்டு பிடிப்பவருக்க தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறினார்.அரசவையில் இருந்த பலரும் பல பேரை  கூட்டி வந்தனர்.ஆனால் மன்னருக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள் பீர்பால் ஒரு பிச்சைக் காரனையும் அவனுடைய மகனையும் அழைத்து வந்தார்.அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருந்தனர்.அக்பருக்குக் கோபம் வந்து விட்டது.பீர்பால் தண்ணி அவமதித்து விட்டதாகக் கருதினார்.அவர் முகக் குறிப்பினைக் கண்ட பீர்பால் அமைதியாகச் சொன்னார்,''இந்தத் தந்தை உலகிலேயே தன் மகன் தான் மிகுந்த அழகுள்ளவன் என்று கருதுகிறார்.ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைதான் உலகில் அழகு  என்று கருதுகின்றனர்.இதை யாரேனும் மறுக்க முடியுமா?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment