உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மாபாவி.

0

Posted on : Saturday, July 14, 2012 | By : ஜெயராஜன் | In :

நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்.ஒரு முறை அவர் மதுரையில் கோவலன் கண்ணகி நாடகம் போட்டார்.நாடகத்தில் கண்ணகி கோவலனைப் பார்த்துப் பாடுகிறார்:
''மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு, மன்னா   இன்று போகாதீர்.''
நாடகம் பார்க்க வந்திருந்தோர் கூச்சலிட ஆரம்பித்தனர்,''நம் ஊருக்கு வந்து நம் ஊரையே பழித்துப் பாடுவதா?''என்பதே அவர்களது ஆதங்கம்.சுவாமிகள்  உடனே மேடைக்கு வந்து முதலில் எல்லோரையும் அமைதிப்படுத்தி விட்டு பின் பேசினார்,''என்னுடைய பாடலை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்.'மா' என்றால் திருமகள் என்று பொருள்.'பா'என்றால் கலைமகள் என்று பொருள்.'வி'என்றால் மலைமகள்.மாபாவியோர் என்றால் திருமகளும்,கலைமகளும்,மலைமகளும் ஆகிய மூவரும் என்று பொருள். இந்த மூன்று பெரும் வாழ்கின்ற பெருமையுடைய மதுரையில் நான் அணிந்து கொள்ளும் இந்த சாதாரண சிலம்பை யார் வாங்குவார்கள் என்ற எண்ணத்துடன் கண்ணகி பாடுவதாக நான் எழுதியுள்ளேன்.மதுரையைப் பழிக்கும்எண்ணம் கொஞ்சம் கூட எனக்குக் கிடையாது.,''இதைக் கேட்ட எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்களாம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment