உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விட்டல்

0

Posted on : Sunday, July 29, 2012 | By : ஜெயராஜன் | In :

மகாராஷ்ட்ராவில் பகவான் கிருஷ்ணனின் பெயர் விட்டல்.விட்டல் என்றால் 'சும்மா உட்கார்'என்று பொருள்.அந்தப் பெயர் வந்த கதை:
ஒரு கிருஷ்ண பக்தரின் தாயார் இறக்கும் தருவாயில் இருந்தார்.அந்த பக்தர் தாயின் கால்களை அமுக்கிக் கொண்டிருந்தார்.கிருஷ்ணர்,தன் பக்தன்  இப்படி உண்ணாமல் உறங்காமல் தாய்க்குப் பணிவிடை செய்வதைப் பார்த்து அவனுக்கு உதவி செய்ய எண்ணி ,அவன் பின்னால் வந்து நின்றார். அவருடைய  காலடி ஓசை கேட்டு பக்தன் திரும்பவில்லை.தன் கவனம் முழுவதையும் தாயாரின் பணிவிடையிலேயே செலுத்தியதால் யார் வந்திருக்கிறார்கள் என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.பின் கிருஷ்ணர், ''நான் உனக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன்,''என்றார்.''என் தாய்க்குப் பணிவிடை செய்ய என்னாலேயே முடியும்,''என்றார் பக்தன்.இப்போதும் அவர் திரும்பி கிருஷ்ணனைப் பார்க்கவில்லை.ஆனால் தன் அருகில் இருந்த கல்லை எடுத்துப் பின்னால் தள்ளி,''என் வேலை முடியும் வரை, தயவுசெய்து, அந்தக் கல்லில் அமரவும்.''என்று அவரைப் பார்க்காமலே சொன்னார்.இவ்வாறு பக்தர் சொன்னதன் பேரில் கிருஷ்ணரும் அதில் அமர்ந்திருந்ததால் அவருக்கு  விட்டல் என்ற பெயர் ஏற்பட்டது.
பக்தனின் ஈடுபாடு ஒரு தியானம் என்றால் கடவுளே அதற்கு இடையூறாக இருக்க முடியாது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment