உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பந்தயம்

0

Posted on : Tuesday, July 17, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தாய் தன் பிள்ளையிடம் சொன்னாள்,''ஒரு பந்தயம்,...ஒரு நாள் முழுவதும் உன் இரண்டு கையாலேயும் வாயை பொத்திக் கொண்டு பேசாமல் இருந்தால் உனக்கு நூறு ரூபாய் பரிசு தருவேன்.''
மகன் சொன்னான்,''அட போம்மா,எப்ப பார்த்தாலும் அப்பா ஜெயிக்கிற மாதிரியே பந்தயம் போடுறீங்க.''
******
ஒருவர் மிகப் பெருமையாக சொன்னார்,''நான் சின்னப் பையனாக இருந்தபோது எங்க அப்பா என்னை கன்னுக்குட்டின்னுதான் கூப்பிடுவார்.''
நண்பர் கேட்டார் ,'இப்போ எப்படிக் கூப்பிடுகிறார்?''
''எருமை மாடுன்னு கூப்பிடுகிறார்.''
******
சங்கீத வித்வான் நண்பரிடம் புலம்பினார்,''தொழில் முன்ன மாதிரியில்ல. ரொம்ப வித்தியாசமாய் போய்க்கிட்டிருக்கு.''நண்பர் கேட்டார்,'கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.'வித்வான் சொன்னார்,''முன்னெல்லாம் நான் பாடினால் ரசிகர்கள் தான் எழுந்து போவார்கள்.இப்போது பக்க வாத்தியக்காரனே எழுந்து போய் விடுகிறான்.''
******
''எதுக்கு சேலையில முடிச்சுப் போட்டிருக்கீங்க?''என்று ஒரு பெண்ணை அவர் தோழி கேட்டார்.அந்தப்பெண் சொன்னார்,''கடிதத்தை மறக்காமல் தபால் பெட்டியில்  போட்டு விட வேண்டும் என்று என் கணவர் சொல்லி அனுப்பினார்.ஞாபகத்துக்காக முடிச்சுப் போட்டு வைத்தேன்..''
தோழி கேட்டார்,'சரி,கடிதத்தை தபால் பெட்டியில் போட்டு விட்டீர்களா?'
அந்தப்பெண் சொன்னார்,''அதெப்படி முடியும்.என் கணவர் தான் கடிதத்தையே என்னிடம் கொடுக்க மறந்து விட்டாரே!''
******
                                                ---தென்கச்சி சுவாமிநாதன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment