உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அதிசயம்

0

Posted on : Friday, July 27, 2012 | By : ஜெயராஜன் | In :

அண்ணல் நபி அவர்கள் ஒரு ஆபத்தில் சிக்கி இருந்தார்.அவருடைய எதிரிகள் இரவோடிரவாக அவரைக் கொலை செய்ய எடுத்த முடிவு தெரிய வந்தது.உடனே அவர் நண்பர் அபுபக்கருடன் இருந்த இடத்தை விட்டு வெளியே சென்றார்.அபுபக்கருக்கு மிகுந்த பயம்.ஆனால் நபி அவர்கள் அமைதியாக இருந்தார்.வழியில் ஒரு குகையைக் கண்ட அவர்கள் ஒளிந்து கொள்ள அது ஏற்ற இடம் என்று கருதி அதற்குள் சென்று ஒளிந்து கொண்டனர். சிறிது நேரத்தில் எதிரிகள் அந்தப் பக்கம் வந்து சேர்ந்தனர்.அவர்கள் சப்தம் கேட்டவுடன் அபுபக்கர் ,''நான் இருவர்தான் இருக்கிறோம்.அவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.நாம் என்ன செய்ய முடியும்,''என்று புலம்ப ஆரம்பித்தார்.நபி அவர்கள்.''நாம் மூன்று பேர் இருக்கிறோம்.இறைவன் நம்முடன் இருக்கிறார்.அவர் இருக்கும்போது நமக்கு என்ன பயம்?''என்று ஆறுதலாய்க் கூறினார்.அப்போது ஒரு அதிசயம் நடந்தது.குகையின் வாயிலில் சிலந்தி ஒன்று கூடு கட்ட ஆரம்பித்து வெகு விரைவில் முடித்து விட்டது.
எதிரிகளின் தலைவன் குகைக்குள் சென்று அவர்களைத் தேடுமாறு ஆணையிட்டான்.இருவர் உள்ளே நுழையப் போகும்போது அத்தலைவன் சிலந்தியின் கூடைக் கண்டு,''உள்ளே போய் நேரத்தை வீணாக்க வேண்டாம்.இதோ,சிலந்தி கூடு கட்டி உள்ளது.இதை சேதப்படுத்தாமல் யாரும் உள்ளே போயிருக்க முடியாது.''அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். முகம்மது காப்பாற்றப்பட்டார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment