உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அறுவை திலகம்

0

Posted on : Saturday, July 07, 2012 | By : ஜெயராஜன் | In :

''என்ன அவருக்கு தலையில் நிறைய காயம்?''
முடி கொட்டிடுச்சி.
******
சாம்பார் தங்கமாக மாற என்ன செய்ய வேண்டும்?
''24காரட் போட வேண்டும்.''
******
மணி இரண்டாகுது..இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு.
''எதுக்கு?''
மூன்று மணி ஆகத்தான்..
******
தொப்பை விழாம இருக்க என்ன செய்யணும்?
''விழாம பிடிச்சிக்கனும்.''
******
காவிரி ஆறு எதில் ஆரம்பிக்கிறது?
''ஏன்,'கா'வில்தான்.''
******
ஔவையார் ஹோட்டலுக்குப் போனால் சர்வர் அவரிடம் என்ன கேட்பார்?
''ஒளவையே!சுட்ட இட்லி வேணுமா,சுடாத இட்லி வேணுமா?''
******
ஒருவனிடம் இரண்டு மாடுகள் இருந்தன.அவன் முதல் மாட்டிற்கு பத்து மணிக்கும்  இரண்டாவது மாட்டுக்கு பன்னிரண்டு மணிக்கும் தீனி போட்டான்.எந்த மாடு முன்னால் சாணி போடும்?
''எந்த மாடும் முன்னால் சாணி போடாது;பின்னால் தான் போடும்.''
******
ஐநூறு ரூபாய் நோட்டில் ஏன் காந்தி சிரித்துக் கொண்டிருக்கிறார்?
''அழுது கொண்டிருந்தால் நோட்டு நனைந்து விடுமே!'' 
******
மேஜை ஆணா,பெண்ணா என்று எப்படி கண்டு பிடிப்பது?
டிராயர் இருந்தால் ஆண்;இல்லாவிட்டால் பெண்.
******
அந்த ஆள் முழிக்கிறது கூட மரியாதையாய் செய்வாரா?அது எப்படி?
'திரு,திரு,'ன்னு தான் முழிப்பார்.
******
ஒரு திருடன் வங்கியில் திருடப் போனான்.சப்தம் கேட்டு ஆட்கள் வந்து விரட்டிச் சென்றார்கள்.சிறிது தூரம் சென்று பார்த்தால் அவன் குளித்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவன் உடலில் ஒரு காயமும் இல்லை.அது எப்படி?
 அவன் திருடப் போனது இரத்த வங்கி.
******
 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment