உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நேரான செயல்

0

Posted on : Friday, July 06, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார்.அவர் மனைவி ஒரு அடங்காப்பிடாரி.அவ்வூருக்கு ஒரு முறை ஔவையார் வந்தார்.ஊரில் பலரும் அவரை தங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி வேண்டினர்.அங்கிருந்த செல்வந்தரும் விருந்துக்கு அழைத்தார்.ஔவையாரும் அவர் வீட்டுக்கு விருந்துக்கு வர சம்மதம் தெரிவித்து விட்டு அன்று மதியம் செல்வந்தர் வீட்டுக்கு சென்று வாசல் திண்ணையில் அமர்ந்தார்.அப்போது செல்வந்தர் தன் மனைவியின் முகத்தைத் தடவிக்கொடுத்து  பின் கூந்தலில் மெதுவாகப் பேன் பார்த்துக் கொண்டே அவள் மனம் குளிரச் செய்துவிட்டு   ஔவையாரை விருந்துக்கு அழைத்த விபரத்தை சொன்னார்.அவர் மனைவிக்கு வந்ததே கோபம்.வீட்டில் கிடந்த முறத்தை எடுத்துக் கொண்டு அவரை அடித்து ஓட ஓட விரட்டினாள்.பயந்து அவர் வெளியே ஓடிவர அங்கு ஔவையார் அமர்ந்திருப்பதைக் கண்டார்.அவன் நிலையைப் பார்த்து ஔவையார் பாடினார்:
சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு 
கொண்டாளைப் பெண்டு என்று கொண்டாயே-தொண்டா 
செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம் 
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.
இப்படிப்பட்டவளை மனைவியாகக் கொண்ட,அடியார்களின் மிதியடிக்கும் கூட ஒப்பாகாத உன் செல்வம் என்ன செல்வம்?அதை நெருப்பில் வீசி எறிவதே நேரான செயல். 
வீட்டின் உள்ளே நடந்த நிகழ்ச்சிகளையும் ஒரு பாட்டாக ஔவையார் பாடினார்.
இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி 
விருந்து வந்ததென்று விளம்ப -வருந்திமிக 
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால் 
சாடினாள் ஓடோடத்தான்.. 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment