உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புதியதை தேர்ந்தெடு.

0

Posted on : Friday, July 27, 2012 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் ,மெல்ல மெல்ல அது பழக்கமாகி நிலை பெற்று விடுகிறது.அது நிலை பெற்ற பிறகு உங்களால் மாற முடிவதில்லை. மாறினால்,புதிதாகக் கற்க வேண்டும்,புதுப் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும்.இப்போது உள்ள நிலையில் பிரச்சினை எதுவும் இல்லை:எப்போது எந்த மாதிரியான பிரச்சினை வரும்,அதற்கு விடை என்ன என்பது நமக்கு நன்கு தெரியும்.ஒரு பாதுகாப்புக்குள் பத்திரமாக இருப்பதுபோல இது இருக்கிறது. பழைய முறைகளில் வாழ்வது கதகதப்பானது.ஆனால் சுதந்திரப்பூ அங்கு மலராது.புதிய வானமும் திறக்காது.எதுவும் அசையாத புதைகுழி போலக் கிடக்க வேண்டியதுதான்.
புதியது அச்சம் தரக் கூடியது என்றாலும் புதியதையே தேர்ந்தெடு.உன் அச்சங்களை விடு.உன் சின்னச் சின்ன சௌகரியங்களை விட்டுத் தள்ளு.இவற்றை விலையாகக் கொடுத்துத்தான் நீ பெரிய மகிழ்வையும் எல்லையற்ற பரவசத்திற்கான வாய்ப்புகளையும் பெற முடியும்.ஆரம்பத்தில் கொஞ்சம் இழப்பு ஏற்படும்.ஆனால் முடிவில் நீ நஷ்டம் அடைய மாட்டாய்.
எருமைகளைப் பாருங்கள்.பல லட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிமாணத்தில் அவை எப்போதாவது,இப்போது புசிக்கும் புல்லைத்தவிர வேறு  எதையாவது புசித்திருக்குமா?ஒரு எருமை புத்தராக முடியாது.இந்தக் காரணத்தினால்தான் விலங்குகள் மனிதனைவிடத் தாழ்ந்து இருக்கன்றன. மனிதனோ புதியவை தேடுபவனாக இருக்கிறான்.புதுமை நமது பகை அல்ல என்பதை ஒரு முறை கற்றுக் கொண்டால் அச்சம் பறந்தோடிவிடும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment