உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-30

0

Posted on : Thursday, July 19, 2012 | By : ஜெயராஜன் | In :

செல்வம் பல நண்பர்களைக் கொண்டு வருகிறது.
துன்பம் அவர்கள் எத்தகையவர்கள் என்று காட்டுகிறது.
******
குற்றத்தை சாமர்த்தியத்தால் அழிக்க முடியாது.
அனுதாபத்தால் அழித்து விடலாம்.
******
பந்தயம் கட்டும் பழக்கம்,
பேராசையின் குழந்தை;பெரிய இடரின் தந்தை.
******
அதிக ஊக்கமும் குறைந்த வேலையும் உடையவர்களே,
சண்டைக்காரர்களாக இருக்கிறார்கள்.
******
உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்.
தன்னை அறிந்தவன் ஆணவம்  கொள்ள மாட்டான்.
******
'அதிர்ஷ்டம்'தராததை 'திருப்தி'யால் பெறலாம்.
******
நீதியைவிட நியாயமாக நடந்து கொள்வதற்குப் பெயர் அன்பு.
******
மனிதர்கள் சில சமயம் உண்மை மீது இடறி விழுவதுண்டு.
ஆனால் பெரும்பாலானோர் எழுந்து நின்று ஏதும்
நடவாதது போல அவசரமாகப் போய்விடுகிறார்கள்.
******
உங்களது கௌரவம் உங்கள் நாக்கு நுனியில் உள்ளது.
******
விரோதம் என்பது மறைந்திருக்கும் வியாதி.
******
மன நிறைவு என்பது இயற்கையான செல்வம்;
ஆடம்பரம் என்பது வலிந்து தேடும் வறுமை.
******
ஒரு தீமையை ஊட்டி வளர்ப்பது
இரண்டு குற்றக் குழந்தைகளை உற்பத்தி செய்யும்.
******
அலங்காரம் செய்வதனால் அகங்காரம் வளரும்;
ஆடம்பரம் செய்வதனால் ஆணவம் ஓங்கும்.
எளிமையின் மூலமே எதையும் வெல்லும் மனத்திண்மை வளரும்.
******
எச்சரிக்கை உணர்வு ஒருபோதும் தவறுக்கு துணை நிற்பதில்லை.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment