உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கண்டுபிடி .

0

Posted on : Tuesday, July 31, 2012 | By : ஜெயராஜன் | In :

1.இலியட்,ஓடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களை எழுதிய ஹோமர் பார்வை இழந்தவர்.ஒரு நாள் மீனவச் சிறுவன் ஒருவன் அவரை வழிமறித்து ஒரு புதிருக்கு விடை கேட்டான்.அப்புதிர்,''பிடித்து விட்டால் வெளியே விட்டு விடுகிறோம்.பிடிபடாவிட்டால் எடுத்துச் செல்கிறோம்.அது என்ன?'' திருதிருவென விழித்தார் ஹோமர்.நீங்களாவது விடை சொல்லுங்களேன்!
******
2.ஒரு கூடையில் பத்து மாம்பழங்கள் இருந்தன.நாங்கள் பத்துபேர் ஆளுக்கொரு மாம்பழம் எடுத்துக் கொண்டோம்.பின்பும் கூடையில் ஒரு மாம்பழம் இருந்தது.எப்படி?
******
விடைகள்:
1.தலைமுடியில் வாழும் பேன் .
2.ஒரு நபர் மாம்பழத்தைக் கூடையுடன் எடுத்துக் கொண்டார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment