உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நான் நல்லவன்

0

Posted on : Wednesday, January 09, 2013 | By : ஜெயராஜன் | In :

நான் என்னை மிக நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேனே, ,உள்ளே எவ்வளவு கசடுகள்,எத்தனை திருட்டுத் தனங்கள் என்று மற்றவர் எவரின் உதவியுமின்றி,இடையூறுமின்றி நம்மை நாமே அனுமானிக்கின்ற நிலை மௌனத்தில் ஏற்படுகிறது.
******
செய்த குற்றத்தை விட,''ஐயோ,செய்து விட்டோமே,''என்ற மனப் புழுக்கம் தான் பெரிய வேதனை.
******
வெளி உலகத்தை நாம் பார்ப்பதில்,கவனிப்பதில் மிகப் பெரிய தவறு இருக்கிறது.ஒன்று,பாதி சிந்தனையோடு பார்த்தபடி இருப்போம்,அல்லது நமது அபிப்பிராயங்களை அதில் ஏற்றி பார்த்தபடி இருப்போம்.எதிரே என்ன இருக்கிறதோ,அந்த விஷயத்தை அதன் குணங்களோடு நாம் பார்ப்பதில்லை.
******
எவருடைய வார்த்தைகளாவது சுருக்கென்று தைத்தால்,எவருடைய இடைஞ்சலாவது காலை உருட்டினால்,கலவரப்பட்டு விடக் கூடாது.நின்று நிதானித்து வலையைத் தாங்கிக் கொண்டு மெல்ல முன்னேற வேண்டும்.நாம் சறுக்குவதற்கு இது மாதிரி விஷயங்கள் நமக்கு முன் வந்து தோன்றும்.
******
--பாலகுமாரன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment