உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள் 37

1

Posted on : Thursday, January 03, 2013 | By : ஜெயராஜன் | In :

அவரவர் அருகதைக்கேற்ப அனைவரையும் நடத்தினால்,கசையடியிலிருந்து தப்புவோர் எவரும் இருக்க முடியாது .
******
புகழும்போது வெட்கப்பட்டும்,அவமானப்படுத்தப் படும்போது அமைதியாகவும் இருந்து பழக்கப் பட்டவன் எவனோ அவனே  மேம்பட்டவன்.
******
பணம் தலை குனிந்து பணியாற்றும்:அல்லது
தலை குப்புறத் தள்ளிவிடும்.
******
நம்பிக்கைவாதி  ரோஜாவைப் பார்க்கிறான்,முட்களை அல்ல.
அவ நம்பிக்கையாளன் முட்களைப் பார்க்கிறான்,ரோஜாவை அல்ல.
******
சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள்.
செயல்கள் தங்கத் துளிகள்.
******
செல்வத்தை மதிப்பு மிக்க பொருளாய் இறைவன்  நினைத்திருந்தால், திருத்தவே முடியாதபடி  வாழ்ந்து வரும் தரங்கெட்ட கயவர்களிடம் அச்செல்வத்தை சேர்த்திருப்பாரா?
******
நீதியானது அரக்கனைக்கூட தவறாகத் தண்டித்து விடக்கூடாது.
******
மனிதன் குறையுடையவன் மட்டும் அல்ல,குறை காண்பவனும் ஆவான்.பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்.தன்  குறையைக் காண்பவன் முழு மனிதன்.
******
உலகில் அடக்க முடியாத  அசுரன் அலட்சியம்.
******
பண்போடு பொருந்தாத அனுதாபம் எல்லாம் மறைமுகமான சுயநலமே ஆகும்.
******
காரணம் இல்லாமல் யாரும் கோபப் படுவதில்லை.ஆனால் அது சரியான காரணமா என்பதுதான் கேள்வி
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

nalla mozhikal...

Post a Comment