உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முடிவெடுக்கும் தருணம்

1

Posted on : Monday, January 07, 2013 | By : ஜெயராஜன் | In :

எப்பேர்ப்பட்ட கெட்டிக்காரர்கள் கூட உணர்ச்சி வசப்படும்போதும், சூழ் நிலைகளின் கைதிகளாக ஆகின்றபோதும், தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள்.மித மிஞ்சிய மகிழ்ச்சியான கணங்களிலும்,மூட் அவுட் ஆகிற நேரங்களிலும்.பரபரப்பான நேரத்திலும் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் கோளாறில் தான் முடிகின்றன.எனவே முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது மட்டும் கீழ்க்கண்ட கேள்விகளை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
*இந்த முடிவை உடனே எடுத்தாக வேண்டுமா?
*இந்த முடிவை எடுக்க போதுமான நேரம் சிந்திக்கச் செலவழித்தோமா?
*நம் விருப்பத்தை மட்டும் மனதில் கொள்ளாது,இது நமக்கு நன்மை செய்யுமா என்று சிந்தித்தோமா?
*யாருடைய வற்புறுத்தலின் பேரிலாவது இந்த முடிவை எடுத்தோமா?
*நமக்கு இந்த முடிவில் முழு உடன்பாடு உண்டா?
*உணர்ச்சி பூர்வமாய் இல்லாது அறிவு பூர்வமாய் எடுக்கப்பட்ட முடிவா இது?
*இந்த முடிவில் கெட்ட நோக்கம் உள்ளதா?
*இந்த முடிவில் உள் நோக்கம் உள்ளதா?
               இந்தக் கேள்விகளுக்கு சாதகமான பதில் அமைந்தால் முடிவு பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நல்லதொரு ஆலோசனை!

Post a Comment