உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

'இல்லை'என்று சொல்.

0

Posted on : Friday, January 11, 2013 | By : ஜெயராஜன் | In :

சோம்பேறி கையேந்தினால்,'இல்லை'என்று சொல்.
பெரியவர்களை அவமதிப்பவன்,கல்வி கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
காரணம் அந்தக் கல்வி அவனை மேலும் அகங்காரனாக்கும்.
அழகான பெண் வழிய வந்து காதல் கேட்டால் ,'இல்லை என்று சொல்.
அது பல ஆபத்துக்களை தவிர்க்கும்.
பணக்காரன் அறிவுரை கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
அவன் உன்னை அவமதிப்பதற்கே கேட்பான்.
ஏழை இலவச உதவி கேட்டாளல் ,'இல்லை'என்று சொல்.
அவன் தொடர்ந்து உதவி கிடைத்தால் பிச்சைக்காரன் ஆவான்.
கடவுள் உன்னிடம் பக்தியைக் கேட்டால் ,'இல்லை'என்று சொல்.
அப்படிக் கேட்பவர் கடவுளாக இருக்க மாட்டார்.
                                       --ஒரு சீனக் கவிதையின் கருத்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment