உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாடிக்கை

1

Posted on : Wednesday, January 09, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு டாக்டர் தனது  மனைவியோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஒரு அழகான பெண் வந்தார்.அவர் டாக்டரைப் பார்த்து புன்  முறுவல் பூத்து சென்றார்.இதை கவனித்த டாக்டரின் மனைவி சந்தேகத்தோடு புருவத்தைதூக்கினார்.டாக்டர் உடனே,''அவர் வாடிக்கையாளர்,'' என்றார். மனைவி கேட்டார்,''அவர் உங்களுக்கு வாடிக்கையாளரா,நீங்கள் அவருக்கு வாடிக்கையாளரா?''
******
''அன்பே,நாளை நமது இருபத்தைந்தாவது ஆண்டு திருமண நிறைவு நாள்.அதைக் கொண்டாட இதோ,நாம் வளர்க்கும் கோழிகளில் இரண்டை அடித்து சமைத்து கொண்டாடுவோமா?''
'பாவம் அவற்றை விட்டுவிடு.இதில் அவற்றின் குற்றம் ஏதுமில்லை.'
******
விண்வெளி வீரர் ஒருவர் தன நீண்ட பயணத்தை முடித்து வந்திருந்தார்.ஒரு நாத்திகவாதி,''விண்ணில் கடவுளைக் கண்டீர்களா?''என்று கேட்டார்.அவரும் ஆம் என்று சொல்ல,''தயவு செய்து இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,''என்று கேட்டுக் கொண்டார்.அடுத்து ஒரு சமயவாதி இதே கேள்வியை அவரிடம் கேட்டார்.ஏற்கனவே நாத்திகவாதியிடம்,இந்த விஷயம் பற்றி வேறு யாரிடமும் பேசுவதில்லை என்று உறுதி அளித்திருந்ததால் அவர் மௌனமாயிருந்தார்.உடனே சமயவாதி,''சரி,சரி,நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கிறது.இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.''என்றார்.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

பகிர்வுக்கு நன்றி!

Post a Comment