உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-39

1

Posted on : Saturday, January 19, 2013 | By : ஜெயராஜன் | In :

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.
பாடம் பண்ணி பத்திரப் படுத்தக் கூடாது.
******
எதுவும் நேராதது போல நடந்து கொள்ளுங்கள்,
என்ன நேர்ந்திருந்தாலும் சரி.
******
அறிவாளி கண்களால் பேசுகிறான்:
முட்டாள் காதுகளால் விழுங்குகிறான்.
******
நன்மைகள் செய்பவன் என் உணர்ச்சியைத் துன்புறுத்துகிறான்.
புகழைத் தருபவன் என் வாழ்வைப் புண்படுத்துகிறான்.
******
உன்னதமான காரியத்தை செய்ய யாருக்கு நிர்ப்பந்தம் தேவைப்படுகிறதோ,அவன் அதை என்றும் முடிக்க மாட்டான்.
******
சொந்த விஷயம் என்றால் சுயநல வாதிகளாகி விடுகிறோம்.
அடுத்தவர் விஷயம் என்றால் லட்சிய வாதிகளாகி விடுகிறோம்.
******
ஓய்வு என்பது மட்டமான சொல்,
அது எந்த மொழியிலாயினும் சரி.
******
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்.
ஏனெனில் அதற்கு ஒரு நாளைக் கொடுத்தால்,அது அடுத்த நாளையும் திருடிக் கொண்டுவிடும்.
******
அனுபவம் என்பது இரண்டாவது முறை தவறு செய்யும்போது சுரீர் என உணர்த்துவது.
******
தோல்வி என்பது முனைப்பில்லாத முயற்சிக்குக் கிடைக்கும் பரிசு.
******
வயது விஷயத்தை பெரிதாய் நினைக்காதீர்கள்.உங்களுக்கு ஒரு வயது ஏறி விட்டதென்றால் எல்லோருக்கும்தான் ஒரு வயது ஏறுகிறது.
******
இவன் ஒரு முட்டாளோ என்று நாலு பேர் சந்தேகப்பட்டாலும் பரவாயில்லை.வாயைத் திறவாமல் இருப்பதே மேல்.--வாயைத் திறந்து அந்த சந்தேகத்தை உறுதிப் படுத்துவதைக் காட்டிலும்.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சிறப்பான தொகுப்பு! பகிர்வுக்கு நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

Post a Comment