உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வியாபாரி

0

Posted on : Thursday, January 10, 2013 | By : ஜெயராஜன் | In :

முல்லா ஒரு தடவை தனது வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார். ஆனால் அவர் நினைத்தபடி வீட்டை விற்பது அவ்வளவு சுலபமாக இல்லை. யாரும் அவரை விலை கேட்டு அணுகவில்லை.என்ன செய்வது என்று யோசித்தார்.திடீரென ஒரு நாள் வீட்டுச் சுவரை  இடித்து ஒரு செங்கல்லை எடுத்தார்.அவருடைய செயல் அவர் மனைவிக்குப் புரியவில்லை.''என்ன இப்படி சுவற்றை இடித்து விட்டீர்கள்?''என்று கேட்க, முல்லா சொன்னார், ''அட,முட்டாள் பெண்ணே,உனக்கு என்ன தெரியும்?எந்தப் பொருளை விற்பதானாலும் அதன் மாதிரி ஒன்றைக் காண்பித்தால்தானே வாங்குபவர்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்?அப்போதுதானே நான்கு பேர் அதைப் பற்றி விசாரிப்பார்கள்?அதனால் தான் நமது வீட்டை விற்பதற்கு மாதிரியாக இந்த செங்கல்லைக் காட்டப் போகிறேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment