உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

செல்ல நாய்.

1

Posted on : Sunday, January 20, 2013 | By : ஜெயராஜன் | In :

சிறுவன் ஒருவன் ஒரு குட்டி நாயை ஆசையாய் வளர்த்து வந்தான்.ஒருநாள் திடீரென நாய் கீழே மயங்கி விழுந்தது.உடனே அவன் அழுதான். அவன் தந்தை அங்கு ஓடி வந்து நாயைப் பார்த்தார்.நாய் இறந்து விட்டது என்று அவர் எண்ணி,அதை எப்படி பையனிடம் சொல்லி சமாதானம் செய்வது என்று யோசித்தார்.பின் ஒரு முடிவு செய்து மகனிடம்,''இதோ பார்,உன் செல்ல நாய் இறந்து விட்டது.நாம் என்ன செய்ய முடியும்?இப்போது அதை நல்ல படியாக நமது தோட்டத்தில் புதைத்துவிடுவோம்.பின்னர் அப்பா உன்னை கடற்கரைக் குக் கூட்டி செல்லுகிறேன்.அங்கு குதிரை சவாரி செய்துவிட்டு பின் ஹோட்டலுக்கு செல்வோம்.அங்கு உனக்குப் பிடித்ததையெல்லாம் வாங்கித் தருகிறேன்.நிறைய ஐஸ் க்ரீமும் வாங்கித் தருகிறேன்,''என்றார்.பையனின் முகத்தில் இப்போது ஒரு மலர்ச்சி!அப்போது திடீரென நாய் சற்று புரண்டது.பின் உடலை சிலிர்த்தவாறு எழுந்து நடந்து  சென்றது. தந்தை,''அட,உன் நாய் பிழைத்துக் கொண்டது!''என்று கூவினார்.பையன் சிறிது நேரம் யோசித்தான்.பின் சொன்னான்,''அப்பா,அதைக் கொன்று விடுவோம்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

இதுதான் நிதர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

Post a Comment