உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யாருக்கு சொர்க்கம்?

0

Posted on : Friday, January 18, 2013 | By : ஜெயராஜன் | In :

தான் ஏழையாக இருந்தாலும்
தன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குத் தானம் தருபவனும்,
ஆற்றல் படைத்திருந்தும்,
தனக்குத் தீங்கு இழைத்தவனை மன்னிப்பவனும்,
இளம் வயதுடையவனாயிருந்தும்,பொறிகளைக் கட்டியும்,உடலை வாட்டியும்,தவம் புரிபவனும்,
எல்லாம் அறிந்திருந்தும்,
வாயைத் திறவாது மௌனமாய் இருப்பவனும்,
இன்ப துன்பங்களை அனுபவிக்கத் தகுதி இருந்தும்,
அவற்றைத் துறந்து விடுபவனும்,
எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் பொழிபவனும் ,
சொர்க்கம் சேருவார்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment