உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனச்சோர்வு

1

Posted on : Monday, September 13, 2010 | By : ஜெயராஜன் | In :

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம்.எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும்.யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும்.மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல ஒரு வெறுமை வரும்.அப்படியானால்  உங்களுக்கு மனச்சோர்வு என்று அர்த்தம்.
நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை.எதிர்பார்த்தது எதுவோ நிகழவில்லை.ஆசைப்படி வாழ்க்கை அமையவில்லை.உங்களுக்குக் கிடைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறீர்கள்.அதை எதிர்க்கிறீர்கள்.
நீங்கள்மனச்சோர்வுடன் இருக்கும்போது மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொளவேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்.உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்.இரக்கத்தை யாசிக்கிறீர்கள்.
உங்கள் விருப்பப்படி உலகம் ஏன் நடக்க வேண்டும்?நீங்கள் விரும்பும்படி தங்களை மற்றவர்கள் ஏன் ஏய்த்துக் கொள்ள  வேண்டும்? அகங்காரம் எங்கிருந்தாலும் அதற்கு அடி விழத்தான் செய்யும்.அப்போது மனச்சோர்வு முளைத்து எழும்.அது உங்களைப்பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும்.
வெளியே இருந்து ஆயுதம் கொண்டு தாக்குபவர்களைவிட உள்ளிருந்துகொண்டு உங்களைக் கீறிக் கிழித்து குடைந்து உங்களை உபயோகம் இல்லாமல் அழித்துவிடும்.மனச்சோர்வு ஒரு விஷ ஆயுதம்.
மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு,அதற்குக் காரணம் நீங்கள் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.உலகின் மீது கோபம் கொள்ளாதீர்கள்.உங்கள் குறைகளை உணர்ந்து,மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு என்று உணருங்கள்.வழியும் வேதனையும்  நிறைந்த அனுபவங்களையே வாழ்க்கைப் பாடமாக ஏற்று உங்களைப் பக்குவப் படுத்திக் கொள்ளுங்கள்.மாற்றுக் கருத்துக்களை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.அவற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள்.கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நல்ல பதிவு.

Post a Comment