உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முறை என்ன?

0

Posted on : Friday, September 17, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தன நாய்க்குக் குணம் இல்லை என்று மிருக வைத்தியர் ஒருவரை அணுகினான்.அவரும் பரிசோதித்துவிட்டு,''இந்த மருந்தை ஒரு வாரம் கொடுத்து வாருங்கள் சரியாகிவிடும்.இந்த மருந்து இனிப்பாய் இருக்கும்.அதனால் நாய் அதை விரும்பிக் குடிக்கும்,''என்றார்.வீட்டுக்கு  சென்றவுடன்,அவன்நாயை தன முழங்கால்களுக்கு இடையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு மருந்தை அதன் தொண்டைக்குள் ஊற்ற முயற்சி செய்கையில் அது திமிறி ஓடி விட்டது.மருந்தும் கொட்டிவிட்டது.சிறிது நேரம் கழித்து பார்க்கையில் அந்த நாய் சிந்திய மருந்தை நக்கிக் கொண்டிருந்தது.இப்போதுதான் அவருக்குப் புரிந்தது.நாய் மருந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அதை வம்படியாக ஊற்றிய முறைக்கு தான் எதிர்ப்பாய் இருந்திருக்கிறது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment