ஒருவனுக்கு இரண்டு மனைவியர்.ஒருத்தி அவனை விட வயதானவள்.மற்றவள் அவனைவிட வயது குறைந்தவள்.அந்த மனிதனுக்கு முடி நரைக்க ஆரம்பித்தது.அதைப் பார்த்த இளம் மனைவி,தன் கணவன் கிழவனாகி விட்டான் என்று ஊரில் எல்லோரும் கேலி செய்வார்கள் என்று எண்ணினாள்.அதனால் அவன் தலையில் இருந்த வெள்ளை முடிகளை எல்லாம் பிடுங்க ஆரம்பித்தாள்.மூத்த மனைவியோ,அவனுக்கு முடி கருப்பாயிருந்தால் அவன் இளமையாகவும் தான் அதிக வயதானவள் போல தோற்றம் அளிக்கக் கூடும் என்று நினைத்து தன் கணவன் தலையிலுள்ள கருப்பு முடியைப் பிடுங்க ஆரம்பித்தாள்.இரு மனைவியரின் கைங்கர்யத்தால் அவன் வெகு விரைவிலேயே மொட்டை ஆகி விட்டான்.
|
|
Post a Comment