உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

லாபம்

0

Posted on : Wednesday, September 15, 2010 | By : ஜெயராஜன் | In :

தாயின் தளரா உழைப்பினால் படித்துநல்ல வேளையில் அமர்ந்த ஒருவன்,தன முதல் மாத சம்பளத்தில் தன தாய்க்கு ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நல்ல சேலை வாங்கி ஊருக்கு அனுப்பிவைத்தான்.அதன் உண்மையான விலை தெரிந்தால் ,அம்மா வருத்தப்படுவார்களே என்று கருதி அதன் விலை இருநூறு ரூபாய் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.அடுத்த வாரம் அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.''நீ அனுப்பிய சேலை நன்றாக இருந்தது .அதைப் பார்த்த பக்கத்து வீட்டு அக்கா ஐநூறு ரூபாய் கொடுத்துவாங்கிக் கொண்டார்கள்.இன்னும் பல பேர் இதே மாதி சேலையை ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராய் இருக்கிறார்கள்.இதில் நல்ல லாபம் கிடைக்கும்போலத் தெரிகிறது.எனவே உடனே அதே மாதிரி சேலைகள் பத்து வாங்கி அனுப்பவும்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment