உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கோபப்படுகிறீர்களா?

0

Posted on : Sunday, September 26, 2010 | By : ஜெயராஜன் | In :

நாம் ஏன் கோபப்படுகிறோம்?ஒவ்வொருவரிடமும் ஒரு பிடிவாத குணம் இருக்கிறது.'நாம் நினைப்பதுதான் சரி:நாம் சொல்வதுதான் சரி;நாம் செய்வதுதான் சரி.'இந்த மாதிரிஇதற்கு எதிராக ஏதாவது நடந்தால் மனம் கொந்தளிக்கிறது.இந்தக் கொந்தளிப்புதான் கோபமாக வெளிப்படுகிறது.ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.தன கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட  அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன.இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்?நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம் .கோபம் வடிந்தவுடன்  நினைத்துப் பார்த்துஇப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறான். அடுத்தவர் சொல்வதிலும் செய்வதிலும் நினைப்பதிலும் நியாயம் இருக்கக்கூடும் என்று நினைக்கக் கூடிய மனோபாவம் வந்து விட்டாலே கோபத்தைக் கிட்டத்தட்ட முழுமையாக அடக்கி விட்டதாக அர்த்தம். 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment