ஒருவர் தன ஊரிலேயே பெரிய பணக்காரராயிருந்த ஒருவரைப் பார்க்கப் போனார்.அப்போது அவர் எதிரிலேயே வந்தார்.அவர் ஒரு பழைய வேஷ்டிஒரு கிழிந்த துண்டுடனும் இருந்தார்.இவருக்கோ பொறுக்க முடியவில்லை ''அய்யா,நீங்கள் இந்த ஊரில் பெரும் பணக்காரர்.நீங்கள் இந்த மாதிரி உடை உடுக்கலாமா?''என்று கேட்டார்.அவர் சொன்னார்,''தம்பி,அதனால் என்ன?இது நம்ம ஊர் தானே?எல்லோருக்கும் என்னைத் தெரியுமே?இவர்களிடம் நான் பகட்டாய் இருக்க வேண்டிய அவசியம் என்ன?''
சில நாட்கள் கழித்து அதே நபர் பக்கத்திலிருந்த ஒரு பெரிய நகரத்திற்கு ஒரு வேலையாய் சென்றார்.அங்கும் அவர் அந்த பணக்காரரை சந்திக்க நேர்ந்தது. அப்போதும் அவர் பழைய வேஷ்டி,கிழிந்த துண்டுடனே காணப்பட்டார். ''என்ன அய்யா,நம்ம ஊரில தான் எல்லோரையும் தெரியும் என்று பழைய துணி உடுத்தியிருந்தீர்கள்.இந்த நகரத்திற்கு வரும்போதாவது நல்ல உடைகளை உடுத்தி வந்திருக்கலாமே?''என்று கேட்டபோது,பணக்காரர் சொன்னார்,''அதனால் என்ன,தம்பி,இந்த ஊரில் யாருக்கும் நம்மைத் தெரியாதே?எந்த உடை உடுத்தினால் என்ன?''
|
|
Post a Comment