ஒரு எழுத்தாளரை தன வீட்டில் வாடகைக்கு வைத்திருந்தார் ஒருவர்.எழுத்தாளர் பல மாத வாடகை கொடுக்கவில்லை.பல முறை நடந்தும் ஒன்றும் நடக்கவில்லை.பொறுமையிழந்த வீட்டுக்காரர்,ஒருநாள் அவரிடம் வந்து உடனடியாக வாடகைப் பாக்கியைக் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.எழுத்தாளர் சொன்னார்,''நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது.பத்து ஆண்டுகள் கழித்து,'இந்த வீட்டில் ஒரு மாபெரும் எழுத்தாளர் குடியிருந்தார்' என்று மக்கள் பேசுவார்கள்.''வீட்டுக்காரர் சொன்னார்,''நீங்கள் இன்று பணத்தைக் கொடுக்காவிட்டால்,நாளையே மக்கள் அந்த மாதிரிபேசுவார்கள்.''
|
|
Post a Comment