உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

டாக்டர் கோவூர்

0

Posted on : Thursday, September 23, 2010 | By : ஜெயராஜன் | In :

டாக்டர் கோவூர் கேரளத்தில் பிறந்து இலங்கையில் வாழ்ந்தவர்.தலை சிறந்த மனோதத்துவ மருத்துவர்.மாபெரும் பகுத்தறிவாளர்.பல மூட நம்பிக்கைகளையும் அறிவியல்,மருத்துவ இயல் மூலமாக அம்பலப்படுத்தியவர்.அவருடைய சிந்தனை முத்துக்கள் சில;
**ஒரு குழந்தை பிறக்கும்போது எதைப்பற்றியும் எந்தவித அறிவும் இன்றி வெறுமையாகத்தான் பிறக்கிறது.அப்போது அதன் மூளையை ஒரு புதிய பணப்பைக்கு ஒப்பிடலாம்.அதில் நாம் பணம் போடும் வரை அது காலிதான்.நாம் அதில் எதைப் போடுகிறோமோ அதைத்தான் திரும்ப எடுக்கலாம்.செல்லாத நாணயத்தைப்  போட்டால் செல்லாத நாணயத்தைத் தான் எடுக்க முடியும்.அதுபோல குழந்தையின் உள்ளத்தில் எத்தகைய கருத்துக்களை செலுத்துகிறோமோ அவையே  வெளிப்படும். ஒரு வேறுபாடு.பணப்பையில் போட்டதை நாம் எடுத்துவிட்டால் அது காலியாகிவிடும்.ஆனால் குழந்தையின் மனதிலிருந்து கருத்துக்கள் வெளிப்பட அது மென்மேலும் அறிவு வளர்ச்சியாகும்.குழந்தைகளின் உள்ளத்தில் தீய கருத்துக்களைத் தூவுவதில் பெற்றோரே பெரும்பங்கு ஏற்கின்றனர்.
** ஏமாற்றுதல் என்பது சட்டம் மீறிய கிரிமினல் குற்றம் ஆயினும் மதத்தின் பெயரால் செய்தால் அதற்கு சட்ட ஒப்புதல் கிடைக்கும்.
**பிரபஞ்சத்தில் நடப்பது எல்லாம் இயற்கையே ஒழிய,இயற்கைக்கு மேம்பட்டதல்ல.சிலவற்றுக்கான காரண காரிய விளக்கங்களை இன்னும் மனிதன் அறியாதிருக்கலாம்.நேற்றுப் புரியாத சில இன்று புரிகின்றன.இன்றைய அற்புதங்கள் சில நாளை சாதாரணமாகலாம்.இன்று நமக்கு விளங்காத சிலவற்றுக்கு அறிவியல் வழியில் விளக்கம் தரப்படும் வரையில் நாம் காட்டுமிராண்டித்தனமான காரணங்களை நம்பித்தான் தீர வேண்டுமா?
**எதையும் சரிதானா என்று ஆராய்ந்து பாராமல் ஏற்றுக்கொள்வது முட்டாள் தனம் மட்டுமல்ல.ஆபத்தானதும் கூட.
**பல்வேறு மத நூல்களில் நீர் மேல் நடப்பது,மலையைத் தூக்கியது போன்ற கதைகள் உள்ளன.பெருமையாகவும் சிறப்பாகவும்  தனித்துத்  தெரிய  வேண்டும்  என்பதற்காக தீர்க்கதரிசிகள் இவற்றை செய்ததாக புனைந்துரைக்கப்பட்ட கதைகளால் அந்த தீர்க்கதரிசிகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.பெரியோர்கள் மீது அற்புதங்களைத் திணிக்கும்போது அவர்கள் வாழ்க்கையின் பயன் கெட்டுப்போய் ,அவர்கள் சொல்லியும் செய்தும் வாழ்ந்தும் காட்டிய நன்னெறிகளைக் கடைப்பிடிக்காமல்,அவர்களை வணங்கி வழிபடவே மக்கள் விரும்பினர்.
நேரிய வாழ்வும்,தன்னலமற்ற தொண்டும் ஒருவரை உன்னத நிலைக்கு உயர்த்திடப்  போதுமானவை.
**பொய்யான எண்ணம் ஒன்று, பெரும்பான்மை மக்கள் நம்புவதாலோ,பழங்காலத்திலிருந்தே நம்பப்படுவதாலோ,நம்புவோரில்  புகழ் பெற்ற அறிவியல் வல்லுநர் இருப்பதாலோ மெயயாகிவிடாது
**படிக்காத எமாளிகளால் சமுதாயத்துக்கு விளையும் கேடுகளைவிட படித்த எத்தர்களால் வரும் தீமையே அதிகம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment