உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சில தகவல்கள்

0

Posted on : Saturday, September 11, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கிலோ பஞ்சை 660 கிலோ மீட்டர் நீளத்திற்கு நூலாகத் திரிக்க முடியும்.
**********
இறை இல்லமான காபா ஒரு கருங்கல் கட்டிடம்.33 முழ நீளமும்,22 முழ அகலமும் உள்ள இந்தக் கட்டிடம் உயர்ந்த கறுப்புத் துணியினால் போர்த்தப்பட்டிருக்கிறது.முதல் மனிதரான ஆதம் இறைவனை வணங்க இந்த ஆலயத்தைக் கட்டினார்.
**********
உலகில் அதிகமாக உபயோகப் படுத்தப்படும் காய்கறி,வெங்காயம்.
**********
எஸ்கிமோ என்றால் பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்று பொருள்.அதனால் அவர்கள் தங்களை இனுட் (inuit) என்று சொல்லிக் கொள்கிறார்கள்.அதன் பொருள்,'உண்மையான மனிதர்கள்'.
**********
கிரேக்க புராணப்படி,பண்டோரா என்பவள் தான் முதல் பெண்மணி.ஜீயஸ் கடவுள் ஆணின் கொட்டத்தை அடக்க அவளைப் படைத்தார்.அவர் அவளிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து,''இந்தப் பெட்டிக்குள் உனக்கு தேவையான அத்தனை ஆயுதங்களும் இருக்கின்றன.அதைத் திறந்து பார்க்காதே.எப்போதாவது தேவைப்படும்,''என்றார்.உலகுக்கு வந்தவுடன் பெண்களுக்கே உரிய ஆர்வத்தில் அவள் அதைத் திறக்கிறாள்.உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் முதலில் அந்தப் பெட்டியில் தான் இருந்தன.அதனைத் திறந்தவுடன் அத்தனையும் வெளி வந்து விட்டன.ஒன்றே ஒன்று மட்டும் பெட்டிக்குள் ஒரு மூலையில் ஒட்டி ஒளிந்து கொண்டது.அது நம்பிக்கை.
'இந்தத் துன்பத்தை நாம் கடப்போம்.நல்லது நடக்கும்,'என்கிற நம்பிக்கை தான் நம்மை எந்தப் புயலிலும் வலி நடத்தி செல்லும் .
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment