உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தெரியாமல்

0

Posted on : Wednesday, September 22, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் ஒரு அலுவலகம் செல்ல மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்.எதிரே வந்த ஒருவர் திடீரெனக் கத்தினார்,''என்ன அய்யா,இப்படி மிதித்துவிட்டு ஒன்றுமே நடவாததுபோலச் செல்கிறீர்கள்?''முன்னவர் சொன்னார்,''தெரியாமல் நடந்துவிட்டது.மன்னித்துக் கொள்ளுங்கள்.''உடனே மிதிபட்டவர் சீறினார்,''மன்னிப்புக் கேட்டு விட்டால் என் காலில் உள்ள வலி போய்விடுமா?''அவர் சொன்னார்,''நான் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?வேண்டுமானால் நீங்களும் அதே போல என்னை மிதித்து விடுங்கள்.ஆனால் ஒன்று,நான் உங்களைத் தெரியாமல் தான் மிதித்தேன்.அதுபோல நீங்களும் என்னைத் தெரியாமல் தான் மிதிக்க வேண்டும்.''மிதிபட்டவருக்கு மேற்கொண்டு  என்ன பேசுவதென்று  தெரியவில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment