ஒரு மளிகைக் கடைக்காரருக்கு,ஒரு டாக்டர் பலசரக்கு வாங்கியதற்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது.தொலைபேசி மூலம்தொடர்பு கொண்ட போதெல்லாம்,டாக்டர் இல்லை என்ற பதிலே வந்தது.இறுதியில் தன கடை ஆள் ஒருவரை நேரில் அனுப்பி வைத்தார்.அவன் சென்று ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான்.அவன் முகம் சோர்வாயிருந்தது.கடைக்காரர் போய் வந்த விபரம் கேட்டார்.கடை ஆள் சொன்னான்,''என்ன சொன்னார்!என் நாக்கை நீட்ட சொன்னார்.!கை நாடியைப் பிடித்துப் பார்த்தார்!எனக்கு உடல்நிலை சரியில்லை என்றார்!இன்னும் ஏழெட்டு வாரங்களுக்கு இருக்கும் இடத்தை விட்டுஅசையாதே,ஓடி ஆடி வேலை செய்யாதே என்று எச்சரித்து அனுப்பினார்''
|
|
Post a Comment