உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நம்பிக்கை

0

Posted on : Monday, September 27, 2010 | By : ஜெயராஜன் | In :

''மனிதர்கள் என்னிடம் கூறுவதில் பாதிதான் உண்மை என நான் நம்புகிறேன்.''
'ஏன்?'
''நான் ஒரு வழக்கறிஞர்.''
/மற்றவர்கள் கூறுவதில் இரு மடங்கு உண்மை இருப்பதாக நான் நம்புகிறேன்.'
''எதனால் அப்படி?''
'நான் ஒரு வருமான வரி அதிகாரி.'
**********
வேடிக்கை
''அப்பா,இந்த நீரில் மீன் குதித்து விளையாடுவது நல்ல வேடிக்கை.''
'அது அல்ல மகனே உண்மையான வேடிக்கை.அவை குதித்து விளையாடும் நீரிலேயே கொதித்துக் குழம்பாகிறதே அதுதான் வேடிக்கை.'
**********
பஸ்ஸில் ஒருவன்:ஏனையா,செருப்பை வைத்து நன்றாக என் காலில் மிதித்துவிட்டு,சாரி சொல்கிறாயே?
பதில்:மிதிக்காமல் சாரி சொல்ல முடியாதே?
**********
''உன்னை ஏன் வேலை நீக்கம் செய்தார்கள்?''
'மாவட்டக் கலெக்டர் வருகை,என எழுதுவதற்குப் பதிலாக,மாவாட்டக் கலெக்டர் வருகை என எழுதி விட்டேன்.'
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment