உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சோம்பேறி

0

Posted on : Thursday, September 16, 2010 | By : ஜெயராஜன் | In :

யாராவது நம்மைப் பார்த்து,'சோம்பேறி'என்று சொன்னால் நாம் அதனால் பாதிக்கப் படுகிறோம்.''நான் சோம்பேறி கிடையாது,''என்பது நமக்குத்  தெளிவாகவும் உறுதியாகவும் தெரிந்தால் பிறர் நம்மைப் பார்த்து சோம்பேறி  என்று சொல்வது வெறும் பிதற்றல் ஆகத் தெரியும்.அது நம்மை ஒருபோதும் பாதிக்காது.அப்படி பிதற்றுகிறவனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.அப்படியானால் சோம்பேறி என்று சொன்னவுடனே  சிலர் பாதிப்படைகிறார்களே,அது ஏன்?சோம்பேறி என்று ஒருவர் சொன்னதை திட்டப்பட்டவர் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அவருக்கு கோபம் வருகிறது.இன்னும் சொல்லப்போனால்,பிறர்,சோம்பேறி என்று திட்டும்போது,சிலர் அந்த திட்டலுக்கு வருந்துவதைவிடத் தான் சோம்பேறி என்பதை மற்றவர் அறிந்து கொண்டனரே,அந்த உண்மையை எல்லோர் முன்னாலும் சொல்லி விட்டனரே என்பதற்காகவே வருந்துகின்றனர். யார் என்ன சொன்னாலும் நம்மைப் பற்றி நமக்கு தெளிவான கருத்து இருக்கும் வரை அது நம்மை பாதிக்காது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment