ஒரு நாட்டின் அமைச்சர் பக்கத்து நாட்டு அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.அங்கு அவருக்குக் கிடைத்த ஆடம்பரமான வரவேற்பைப் பார்த்து அதிசயித்து,அந்த அமைச்சரால் தனிப்பட்ட முறையில் எப்படி அவ்வாறு செலவழிக்க முடிகிறது என்று கேட்டார்.அவர் ஜன்னலைத் திறந்து ஒரு பாலத்தைக் காட்டினார்.அதில் தனக்கு பத்து சதவீதம் என்றார்.
அடுத்த வருடம் இந்த அமைச்சர் பக்கத்து நாட்டுக்காரரை தன் சொந்த விருந்தாளியாக அழைத்ததன் பேரில் அவரும் வந்தார்.இவர் கொடுத்த வரவேற்பைப் பார்த்து அவர் கதி கலங்கி விட்டார்.அவர் முகக் குறிப்பறிந்து, ,இவரும் ஜன்னலைத் திறந்து,''அதோ பாலம் தெரிகிறதா ?''எனக் கேட்டார். அவர் பார்த்துவிட்டு,'கண் பார்வை தெரியும் தூரம் வரை பாலம் ஒன்றையும் காணவில்லையே?'எனக் கேட்டார்.சிரித்துக் கொண்டே அமைச்சர் சொன்னார்,''ஆமாம்,எனக்கு நூறு சதவீதம்.'
|
|
Post a Comment