உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இரட்டை வெற்றி

0

Posted on : Monday, July 26, 2010 | By : ஜெயராஜன் | In :

பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிளாரன்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் இருந்த ஒரு பெரிய பளிங்குக் கல்லில் சிலை ஒன்று வடித்துத் தருமாறு சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவை அந்த நகரத்தின்  மேயர் கேட்டுக் கொண்டார்.இளைய வயது  தாவூதுவின் சிற்பம் ஒன்றை அல்லும் பகலும் உழைத்து முடித்தார் ஏஞ்சலோ.இறுதி வேலை முடிந்தவுடன் மேயர் சிலையைப் பார்வையிட வந்தார்.அவர் ஏஞ்சலோவிடம், சிலையின் மூக்கு பெரிதாக இருப்பதாக, மிகத் தெரிந்தவர் போலக்  கூறினார்.பெரிய அச்சிலையின் நேர் கீழே நின்று பார்ப்பதால் மேயர் சரியான கோணத்திலிருந்து சிலையைப் பார்க்கவில்லை என்பதை ஏஞ்சலோ புரிந்து கொண்டார்.அனால் அவர் எதிர் வார்த்தை ஏதும் பேசாது,ஒரு உளியையும்,கொஞ்சம் பளிங்குத் தூளையும் கையில் எடுத்துக் கொண்டு,மேயரை மேலே  வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.மேயர்
மேலே வந்ததும் சிலைக்கு முன்னால் சில அடி தூரத்தில் நின்று கொண்டார். அவர் வந்ததைக் கவனித்த ஏஞ்சலோ ,உளியைக் கொண்டு சிலையின் மூக்குப் பகுதியில் லேசாகத் தட்டிக் கொண்டு,அதே சமயம் கையிலிருந்த பளிங்குத்தூள் மூக்குப் பகுதியிலிருந்து கீழே  விழச் செய்தார்.மேயரும்  அவர் மூக்குப் பகுதியை சீர்திருத்துவதால் தான் அந்தத் தூள் விழுகிறது என்று நம்பி மிகுந்த திருப்தி அடைந்தார்.ஆனால் ஏஞ்சலோ உண்மையில் ஒரு சிறு மாற்றமும் செய்யவில்லை.அவர் சூழ்நிலைக்கேற்றபடி நடந்து கொண்டதால் இருவருக்கும் திருப்தி;இருவருக்கும் வெற்றி.யாரும் மனம் புண்படவில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment