உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஹா!ஹா!

0

Posted on : Friday, July 23, 2010 | By : ஜெயராஜன் | In :

குட்டிப் பாம்பு தாய்ப் பாம்பிடம் கேட்டது,'அம்மா,நாம் கடித்தால் விஷமா?தாய் கேட்டது,''ஆமாம்,ஏன் கேட்கிறாய்?''குட்டி சொன்னது,'இல்லை நான் தெரியாமல் என் நாக்கைக் கடித்துக் கொண்டேன்.'
**********
வேலைக்காரன் முதலாளியிடம் சொன்னான்,''எனக்கு சம்பள உயர்வு வேண்டும்,மூன்று கடைக்காரர்கள் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்,'முதலாளி கேட்டார்,''யாரப்பா அந்த மூன்று பேர்?என்ன கேட்கிறார்கள்?''வேலைக்காரன் சொன்னான்,'பலசரக்குக் கடைக்காரர்,அரிசிக் கடைக்காரர்,காய்கறிக் கடைக்காரர்.அவர்கள் நான் தர வேண்டிய கடனைக் கேட்கிறார்கள்.'
**********
ஒரு பெண் காலில் செருப்பிலாத ஒரு சிறுவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டு,அவனை ஒரு கடைக்கு அழைத்து சென்று செருப்பு வாங்கிக் கொடுத்தாள்.சிறுவன் கேட்டான்,'நீங்கள் கடவுளா?'அந்தப்  பெண் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னாள்,''இல்லையப்பா,நான் அவருடைய பல குழந்தைகளில் ஒருத்தி.''சிறுவன் கூறினான்,'நான் அப்போதே நினைத்தேன்,நீங்கள் கடவுளாக இல்லாவிடில் அவருக்கு உறவாயிருப்பீர்கள் என்று.'
**********
பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு நேரம்.எல்லோரும் வரிசையில் வந்தனர்.ஒரு கூடையில் நிறைய ஆப்பிள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.முன் எச்சரிக்கையாய்.ஆசிரியர் ஒரு பலகையில்,'ஒருவர் ஒரு ஆப்பிள் மட்டும் எடுக்கவும்.கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.'என்று எழுதி வைத்திருந்தார்.சிறுவர்கள் ஆளுக்கொன்று எடுத்துச் சென்றார்கள்.கடைசியில் ஒரு பெரிய தட்டில் சாக்லேட்டுகள் வைக்கப் பட்டிருந்தன.ஒருவன் அடுத்தவனிடம் சொன்னான்,''உனக்கு வேண்டுமளவுக்கு சாக்லேட் எடுத்துக் கொள்.கடவுள் ஆப்பிளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.''
**********
ஒரு விருந்து நடக்க இருந்தது.எதிர் பார்த்ததற்கு மேல் அழையாமலே நிறையப் பேர் வந்திருந்தனர்.அவ்வளவு பேருக்கும் உணவு பத்தாது.என்ன செய்வது என்று ஏற்பாடு செய்தவர் யோசித்துக் கொண்டிருந்தார்.அவருடைய நண்பர் ,''நான் சரி செய்கிறேன்,''என்று சொல்லிவிட்டு கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டு,''இங்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் வந்திருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்,''என்றார்.ஒரு நாற்பது பேர் எழுந்து நின்றார்கள்.''அதே போல் பெண் வீட்டார் சார்பில் வந்திருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்,''என்று அவர் சொல்ல முப்பது பேர் எழுந்து நின்றார்கள்.பின்னர் அவர் சொன்னார்,''இப்போது எழுந்து நிற்பவர்கள் எல்லாம் தயவு செய்து வெளியே செல்லுங்கள்.ஏனெனில் இது இந்த வீட்டுக் குழந்தையின் பிறந்த நாள் விருந்து.''
**********
ஒரு கடைக்காரர் தன வாடிக்கையாளரிடம் கூறினார்,''இதோ நிற்கும் பையன் சரியான முட்டாள்.நான் அதை உங்களிடம் நிரூபிக்கிறேன்.வேடிக்கை பாருங்கள்,''என்றார்.பின்னர் அந்தப் பையனைக் கூப்பிட்டு,ஒரு கையில்  ஐந்து ரூபாய்  நாணயத்தையும் இன்னொரு கையில் இரண்டு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு,''இதில் எது உனக்கு வேண்டு தம்பி,''என்று கேட்க அவன் இரண்டு ஒரு ரூபாய்  நாணயத்தை மகிழ்வுடன் எடுத்துக் கொண்டான்.கடைக்காரர் வெற்றிப் புன்னகையுடன் வாடிக்கையாளரைப் பார்த்தார்.
வாடிக்கையாளர் கடையை விட்டு சிறிது தூரம் சென்ற பின் அந்தப் பையன் எதிரில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு வந்தான்.அவனிடம் அவர் கேட்டார்,''ஏன் தம்பி ஐந்து ரூபாயை எடுத்தக் கொள்ளாமல் இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டாய்?''பையன் சொன்னான்,'எனக்கு எல்லாம் தெரியும்.ஏற்கனவே நான் பல முறை இதே போல இரண்டு ரூபாய் வாங்கியிருக்கிறேன்.நான் ஐந்து ரூபாயை எடுத்திருந்தால் இன்னொரு முறை இது போல செய்ய மாட்டார்.அப்போது எனக்கு நஷ்டம் தானே?'
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment